திக் திக் மே 29..! அன்னு என்ன நடக்கும்? கொரோனாவை முன்கூட்டியே கணித்த ஜோதிட சிறுவன் கூறும் திடுக் தகவல்! என்ன தெரியுமா?

கொரோனா வைரஸ் தாக்குதல் மே மாத இறுதியில் கட்டுக்குள் வரும் என்று இந்திய வம்சாவளி இளம் ஜோதிடர் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 43,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 8,80,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு நாட்டின் விஞ்ஞானிகள் இந்த நோய் தாக்கத்திற்கு எதிராக மருந்துகளை கண்டுபிடித்து வந்த வண்ணமுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதல் மிகவும் கொடூரமாக இருக்கக்கூடும் என்று 8 மாதங்களுக்கு முன்னதாகவே பிரபல இந்திய வம்சாவளி ஜோதிடரான அபின்ஞா ஆனந்த் கூறியிருந்தார். 

இவருடைய வயது 14. இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சென்ற ஆண்டு தொடக்கத்திலேயே கிரகநிலை ஆராய்ச்சிகளின் மூலம் ஆண்டு இறுதியில் மிகப்பெரிய அழிவு தொடங்கப்போகிறது என்று கணித்திருந்தார். அதாவது ஜோதிடத்தின் படி ஒரு ராசியில் அதிக கிரகங்கள் சேருகின்ற போது விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்தார். இந்த ராசியில் ஏற்கனவே கேதுவும், சனியும் இருந்தனர். மேலும், குருவும் அந்த ராசிக்கு இடம்பெயர அபாயங்கள் விளைவிக்கக்கூடியது என்று கூறியிருந்தார்.

மேலும் இதே பொழுதின் போது தான் சூரிய கிரகணமும் ஏற்பட்டதாக கூறியுள்ளார். அவ்வாறு ஒரே நேரத்தில் தனுசு ராசிக்கு 6 கிரகங்கள் கூடியிருந்த நிகழ்வும் அரங்கேறும் என்று அப்போது எச்சரித்தார். அவர் எச்சரித்தவாறு இந்த மாத தொடக்கத்தில் இருந்து சில நாட்கள் முன்னர் வரை தனுசு ராசியில் 6 கிரகங்கள் ஒன்றாக இருந்தன. இதனுடைய ஏப்ரல்-2 வரை இந்த நோய் மிகவும் அதிகமாக இருக்கும் என்று அவர் கணித்துள்ளார். 

அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது மே 29-ஆம் தேதிக்கு பிறகுதான் இந்த நோய் மருந்துகளுக்கு கட்டுப்படும் என்று அவர் கூறியுள்ளார். இந்த இறைவன் கணிப்புகள் துல்லியமாக இதுவரை நிறைந்துள்ளதால் பலரும் இதனை நம்புவதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.