அங்க போலீஸ் இருப்பாங்க! காட்டு வழியா போவோம்! ஆண் நண்பனை நம்பிய 16 வயது மாணவிக்கு 9 பேரால் ஏற்பட்ட விபரீதம்!

உலகமே கொரோனாவில் அச்சத்தில் உள்ள நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் ஆண் நண்பர்களிடம் உதவி கேட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அப்படியே காட்டுக்குள் போட்டு விட்டு சென்ற சம்பவம் அனைவரையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.


கொரோனாவின் கொடூரத்தினால் தினம் தினம் ஆயிரம் கணக்கில் மக்கள் இறந்து கொண்டு இருகின்றார்கள். இந்த சூழ்நிலையில், இந்தியாவிலும் ஊரடங்கு 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வோரு மாநிலத்திலும் 21 நாட்களுக்கும் 144 ஊரடங்கு சட்டம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.  

இந்த சூழ்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 24ஆம் தேதி மாலை 16 வயதுடைய சிறுமி ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு செல்ல போக்குவரத்து இல்லாமல் தவித்துள்ளார். உடனே உதவிக்காக தனது ஆண் நண்பருக்கு போன் செய்து வீட்டில் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்த நினைத்த அந்த ஆண் நண்பன், தனது நண்பர்களுக்கு தகவல் அளித்து விட்டு அந்த பெண்ணை அழைக்க சென்றுள்ளார். பின்னர், அந்த பெண்ணிடம், ஆண் நண்பன் 'ஊரடங்கால் நாம் சாலை வழியாக போக முடியாது காவல்துறையினர் இருப்பார்கள், காட்டுப் பாதையில் போகலாம்' என்று கூறி விட்டு அந்த பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுவழி பாதைக்கு கூட்டிச் சென்றுள்ளார். 

காட்டுவழி பாதையை அடைந்த பின்னர், அந்த சிறுமியை பெண்ணின் நண்பனும், 8 ஆண் நண்பர்களும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, அச்சிறுமியை காட்டுக்குள் அப்படியே விட்டு சென்றுள்ளனர். 

தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பம் நடைந்த இடத்திற்கு சென்றுள்ளனர். இதையடுத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இது தொடர்பாக பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.