குழந்தை என்னுது..! ஆனா அப்பா என் கணவன் இல்லை..! மனைவி செய்த படுபாதக செயல்!

கள்ளக்காதலால் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த பெற்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஒடுக்கத்தூரை அடுத்த கல்லப்பாறை பகுதியை சேர்ந்த 46 வயதான பெருமாள் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 28 வயதான ஜெயலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பெருமாளின் மனைவி ஜெயலட்சுமி கள்ளபாறையில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியில் வசித்துவந்த ஹரிஷ் என்ற 26 வயது வாலிபருக்கும் ஜெயலட்சுமிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் ஜெயலட்சுமி கர்ப்பம் ஆனார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த பெண் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்து ஜெயலட்சுமி கோணிப்பையில் குழந்தையைக் கட்டி அருகில் இருந்த விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் வீசி விட்டு வந்து விட்டார். இதனால் அங்கிருந்த தண்ணீரில் மூழ்கிய குழந்தை இறந்து விட்டது.

இந்நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் கோணிப்பை மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கோணிப் பையில் சடலமாக இருந்த குழந்தையை மீட்டனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயலட்சுமி குழந்தையை கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனால் போலீசார் விஜயலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கள்ளக்காதலால் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை வளர்ப்பதற்கு அசிங்கப்பட்டு கோனி பையில் கட்டி கிணற்றில் வீசி குழந்தையை கொலை செய்தேன் என்று ஜெயலட்சுமி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.