குழந்தைக்கு மஞ்சள் காமாலை

அதிக சிவப்பணுக்களுடன் பிறக்கும் குழந்தைக்கு, மஞ்சள் காமாலை இருப்பது சகஜமான ஒன்றுதான். குழந்தைகளின் சிவப்பணுக்கள் சிதைவடையும்போது பிலிரூபினை விடுவிப்பதால் மஞ்சள் காமாலை அறிகுறி தென்படுகிறது.


·         குழந்தையின் கண்கள், தோல், சிறுநீர் போன்றவை மஞ்சள் நிறமாக தென்படும். எப்போதும் தூக்கக்கலக்கத்தில் குழந்தை இருக்கும்.

·         பால் குடிப்பதற்கான ஆர்வமும் ஆசையும் குழந்தைக்கு குறைவாக இருக்கும். குழந்தையின் மலம் கருப்பு நிறத்தில் இருக்கும்.

·         குழந்தையின் பிலிரூபின் அளவை கணக்கெடுத்து மேற்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

·         குழந்தையின் மேனியின் மீது ஒளியை பாய்ச்சும் ஃபோட்டோதெரபியின் மூலம் மஞ்சள் காமாலையை கட்டுப்படுத்தலாம்.

பிறந்த குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுதல், நன்றாக மலம் கழிக்கச் செய்தல் போன்ற செய்கை மூலம் ஆரம்ப நிலையிலான மஞ்சள் காமாலையை சிகிச்சையின்றி குணப்படுத்த முடியும்.