பசும்பால் சுடவைக்காமல் குடித்தால் என்ன பிரச்னை வரும் ??

வீட்டுக்கு முன்பு பசுவை கட்டிவைத்து, கறந்த பாலை தண்ணீர் கலக்காமல் பச்சையாக குடிப்பது தமிழர் வழக்கம். இப்போதும் நம் நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பச்சைப் பால் குடிப்பது நடைமுறையில் இருக்கிறது.


ஆனால் கொதிக்கவைக்காத பால் குடித்தால் பாக்டீரியாவால் ஆபத்து வரும் ஒரு புறம் எதிர்ப்புக்குரல் எழுந்தாலும், இதற்கு ஆதரவாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். எது சரியானது என்பதை பார்க்கலாம்.

       ·   கறந்த பசும் பாலை ஐந்து நாழிகைக்குள் அதாவது இரண்டு மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும் என்று நம் சித்தர்கள் முன்னரே சொல்லி வைத்திருக்கிறார்கள்.

       ·   இரண்டு மணி நேரத்துக்கு மேலான பசும் பாலில் பாக்டீரியாக்கள் நிறைந்துவிடும் என்பதால் அதன்பிறகு காய்ச்சித்தான் குடிக்க வேண்டும்.

       ·   பசும்பால் பச்சையாக குடித்துவந்தால் தோல் நோய்கள் நீங்கி உடல் பளபளப்பு உண்டாகும்.

       ·   நெஞ்சு சளி, உடல் எரிச்சல், மூலம் போன்ற நோய்களைத் தீர்ப்பதற்கும் பச்சைப் பசும் பால் பயன்படுகிறது.

 பாலை உறையவைத்து குடிப்பதைவிட கொதிக்கவைத்து குடிப்பதுதான் நல்லது. கறந்த பாலின் சூடு குறைவதற்குள் குடிக்கவேண்டும்.