தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும்? சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடலாமா?

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லவே தேவையில்லை ஏனெனில் இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து அனைத்து நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் என்று பல நூற்றாண்டுகளாக கூறப்படுகிறது.


ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.

இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும். அதிக பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட ஆப்பிளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.