மருத்துவமனை காவல் பணியில் திருநங்கைகள்! தலைநிமிர வைக்கும் புதிய திட்டம்!

அரசு மருத்துவமனையில் வேலையில் சேர்வதற்கான பணி நியமன ஆணை 8 திருநங்கைகளுக்கு வழங்கபட்டது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மற்றும்  மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மருத்துவ பிரிவில் காவல் பணிக்கு திருநங்கைகள்  ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு மேலும் இதற்கான பணி நியமன ஆணையை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று  தலைமை செயலகத்தில் வழங்கி சிறப்பித்தார்.

இதனிடையே  சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், புதிதாக புற்றுநோய் வலி நிவாரணம் மற்றும் ஆதரவு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,

அரசு மருத்துவமனைகளில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது என எழுப்பபட்ட கேள்விக்கு, குடிநீர் பிரச்ச்னைக்குரிய  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், தட்டுப்பாடு நிலை இல்லை என பதில் அளித்தார்.