நெல்லையில் மனைவி தூக்குப் போட்டு இறந்த சோகத்தில் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போன வாரம் மனைவி! இந்த வாரம் கணவன்! அநாதையாகி தவிக்கும் 3 குழந்தைகள்!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வைகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவருக்கும் தேவகனி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் அடிக்கடி தேவகனி தனது தாயார் வீட்டிற்கு சென்று வந்துள்ளார் .இதையடுத்து கடந்த 18ம் தேதி மாரியப்பன் குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தேவகனி இரவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இதனால் மிகுந்த மனமுடைந்த மாரியப்பன் தனது நான்கு குழந்தைகளையும் இனி எவ்வாறு வளர்ப்பது என்று உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ளவர்களிடம் புலம்பி வந்துள்ளார். இதையடுத்து அவரும் சமூகரெக்கபுரம் அருகே உள்ள தொலைபேசி நிலையம் எதிரே வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து அந்த நான்கு குழந்தைகளும் தற்போது அனாதையாகி உள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மற்றும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.