கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகைக்கு நீதி வேண்டும் என தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் நடிகை ரம்யா நம்பீசன் சாட்சி கூறியிருக்கிறார்.
தமிழ் நடிகை காரில் வைத்து கற்பழிப்பு..! நீதிமன்றத்தில் மலையாள நடிகை கொடுத்த வாக்குமூலம்! வேகமெடுக்கும் வழக்கு!
தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பிரபல நடிகை. இந்த நடிகையை கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கும்பல் ஒன்று கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திலீப் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணைக்கு எடுக்கப்பட்டார்.
இதனையடுத்து முக்கிய குற்றவாளியான திலீப்சுமார் 85 நாட்கள் சிறையில் இருந்து வந்தார். பின்னர் நீதிமன்றத்திலிருந்து நிபந்தனை ஜாமினில் வெளிவந்தார். இந்த சம்பவம் மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்குக்கான விசாரணை கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக எடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. சிறப்பு வழக்காக நடைபெற்று வரும் இந்த வழக்கானது கடந்த 30ஆம் தேதி முதல் அவசர வழக்காக விசாரணை செய்து பட்டு வருகிறது இந்த வழக்கில் பல முக்கிய சாட்சிகள் அனைவரையும் நீதிபதிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட நடிகையின் நெருங்கிய தோழியான பிரபல நடிகை ரம்யா நம்பீசனை நீதிமன்றம் விசாரணை செய்துள்ளது. இந்த சாட்சியம் பூட்டிய அறைக்குள் ரகசியமாக நடந்தது. இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பேசும் பொருளாக இருந்து வருகிறது.