நிர்வாணமாக்கி கை கால்களை முறித்து பிளேடால் அந்த இடத்தில் கிழித்து..! நடுக்காட்டில் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்! அதிர்ச்சி காரணம்!

வயதுக்கு வந்த பெண் பிள்ளை இருக்கும்போது வேறொருவருடன் கள்ளத்தொடர்பு ஈடுபட்ட வந்த பெண்ணை கணவனின் உறவினர்கள் கொலை செய்ய முயன்ற சம்பவமானது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் மேட்டூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள பாலமலை கெம்மம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சின்னகுள்ளன். இவருடைய மனைவியின் பெயர் கலா. இத்தம்பதியினருக்கு வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இதனிடையே கலா அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்து வந்துள்ளனர். இது நாளடைவில் சின்னக்குளன் மற்றும் அவரது உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. முதலில் சின்னகுள்ளன் தன்னுடைய மனைவியை எச்சரித்துள்ளார்.

ஆனால் அதற்கும் சளைக்காத கலா தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னக்குள்ளனின் உறவினர்கள் கலாவை கடுமையாக மிரட்டியுள்ளனர். ஆனால் அதற்கும் கட்டுப்படாமல் சம்பவத்தன்று காட்டிற்குச் சென்று விறகு எடுத்து வருவதாக கூறி சின்னசாமியை சந்தித்துள்ளார்.

கலா மற்றும் சின்னசாமி இருவரும் சந்திப்பதை சின்னகுள்ளனின் உறவினர்களான செல்லப்பன், ரவி மற்றும் ஒருவர் கண்டுள்ளனர். ஆத்திரமடைந்த அவர்கள் கலாவை நிர்வாணப்படுத்தியுள்ளனர். மேலும் உடலின் பல்வேறு இடங்களில் பிளேடால் மோசமாக குத்தி கிழித்துள்ளனர். அவருடைய கை மற்றும் காலை முறித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கலா இறந்துவிட்டார் என்ற நினைப்பில் கலாவை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

ஆனால் கலா உயிருடன் இருந்துள்ளார். மறுநாள் காலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கலாவை அக்கம்பக்கத்தினர் மீட்டெடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கை மற்றும் கால்களில் மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கலாவிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது தன்னை தன்னுடைய கணவரின் உறவினர்களே கொலைசெய்ய முற்பட்டனர் என்று வாக்குமூலம் அளித்தார். வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் கொலை முயற்சியில் ஈடுபட்ட செல்லப்பன், ரவி மற்றும் ஒரு நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பின்னர் கணவர் சின்னக்குள்ளனிடம் விசாரணை செய்வதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் சாராயம் காய்ச்சி வருவதை காவல்துறையினர் கண்டறிந்து அவரையும் கைது செய்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.