அரசியல்வாதிகளின் படுக்கை அறையில் 24 கல்லூரி மாணவிகள்! தோண்டத் தோண்ட விவகாரமாகும் ஹனிடிராப் கேஸ்!

தமிழகத்திற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்திலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற புகாரில் ஒரு நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் பல கோடிக்கு அதிபதி.


மத்திய பிரதேசத்தில் தான் பாலியல் இன்பம் அனுபவிக்கும்போது வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு ஒரு பெண் மிரட்டி பணம் பறிக்க முயல்வதாக மாநகராட்சி ஊழியர் புகார் அளித்திருந்தார். 

இது குறித்து பெண் ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரித்தபோது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பணக்காரர்களுக்கு அனுப்பி வைப்பதும் அதை ரகசியமாக வீடியோ எடுத்து மீண்டும் மீண்டும் பணம் கேட்டு மிரட்டி கோடீஸ்வரியாகி விட்டார் அந்தப் பெண்.

இந்த வழக்கில் ஓட்டுநர், பெண்கள் என 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து பார்த்தபோது திடுக்கிட்டனர். அதில் 4,000த்திற்கும் அதிகமான பாலியல் வீடியோக்கள் இருந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஸ்வேதா ஜெயின் என்ற பெண் பல திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்துள்ளார்.

கல்லூரி மற்றும் வறுமையில் சிக்கும் பெண்களை குறிவைத்து மூளைச் சலவை செய்து அரசியல்வாதிகளின் இச்சைகளுக்கு இரையாக்கி உள்ளார். அதாவது அவர்களிடம் இருந்து பணம் பறிப்பது மட்டும் இவர்கள் நோக்கம் அல்ல. முக்கிய பிரமுகர்களிடம் கோடிக் கணக்கான அரசு ஒப்பந்தங்களை பெறுவதும்தான்.

மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவியும் வாங்கித் தந்துள்ளார். 24 மணிநேரமும் கூட்டிக் கொடுக்கும் வேலையை பார்க்க 40 பெண்களை கைவசம் வைத்திருந்துள்ளார் ஸ்வேதா ஜெயின்